முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஞாநி கருணாநிதியைப் பற்றி அப்படி எழுதவில்லை!

எனக்கு பிடித்த ஒரு சில ஆளுமைகளில் ஒருவர் ஞாநி. அவர் இறப்பை ஒட்டி, அவரை சில திமுக அபிமானிகள் அவர் கருணாநிதி வேட்டியில் சிறுநீர் கழித்தார் என்றும் வேறு சிலர் அவர் வேட்டியை நனைத்தார் என்றும் எழுதியதாக அவரை தூற்றிக்கொண்டு திரிகிறார்கள். ஞாநி எழுதிய அனைத்து ஓ…பக்கங்களையும் வாசித்தவன் என்ற முறையில் ஒன்றை என்னால் உறுதியாக சொல்ல முடியும் அவர் அப்படி எழுதவேயில்லை என்பதுதான். ஞாநி கூட ஒருமுறை விநாயக முருகன் என்பவருடன் தான் அப்படி கூறியதை நிரூபிக்க சொன்னதாக நியாபகம். அந்த குறிப்பிட்ட பத்தி இதுதான்: மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் உரை-யாடல் இது... சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும்-போது, அருகில் தனக்குப் பாதுகாப்-பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: Ôபாத்ரூம்ல கால் இடறி-டுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!Õ 1. என்னை பொறுத்தவரை அவர் கால் இடறி பாத்ரூமில் விழுந்து விட்டார். அதனால் தரையில் இருந்த ஈரம் அவர் வெட்டி மீது பட்டதால், வேறு வேட்டி மாற்ற வேண்டியி
சமீபத்திய இடுகைகள்

அறிவியல் - ஒரு பொய்

பலர் அறிவியல் என்பது மாறக்கூடியது என்பதை மறந்தோ, தெரியாமலோ "scientific" என்று பேசுகின்றனர். அறிவியல் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொய் என்பதே உண்மை. நேற்று ஒரு கருத்து, இன்று ஒரு கருத்து--இதை வித்தியாசமான முறையில் சொல்வதானால் "New theories evolve everyday" அறிவியர்பூர்வமாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகள் கூட 100 சதவீதம் பயனளிக்கும் என்று உறுதிக் கூற முடியாது--காரணம் எந்த மருந்துகளும் 100சதவீதம் பயனளிக்கும் என்று உறுதிக் கூறுவதில்லை--தேவையும் இல்லை